Friday, July 10, 2009

பிரபலப்பதிவருக்கு வந்த வாசகர் கடிதம்

டிஸ்கி : இந்தக் கடிதம் எனக்கு வந்து ரொம்ப நாளாச்சு. பிரபலமானதுல இருந்து வந்த ஒரு சோம்பேறித்தனம் + ஆளாளுக்கு பிரபலப் பதிவர்கள்னு நம்ம பேரச் சொல்லிக்கிட்டு நிறையா பேரு இதே மாதிரி எனக்கு வந்த கடிதம் மாதிரியே கடிதப் பதிவெல்லாம் போட்டதால எழுதாம இருந்தேன் , ஆனா இனிமேலும் எழுதாம இருந்தா நல்லதில்லைன்னு தான் இத இப்ப வெளியிடுறேன்.

தயவு செய்து ப்ளாக்ல எழுதுங்க!.

அன்புள்ள பிரபலப் பதிவர் அவர்களுக்கு,
இதுவரை உங்கள் பதிவுகளை நான் படித்ததில்லை. நான் மட்டுமல்ல யாருமே படித்ததில்லை. இதற்கு காரணம் நீங்கள் இதுவரை பதிவுகள் எதுவும் எழுதவேயில்லை என்பதே.

இவர்தான் பிரபலப் பதிவர் அவர்தான் பிரபலப்பதிவர் என பலரும் பலருக்கும் உங்கள் பெயரை சூட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நீங்கள் எழுதாமல் இருப்பது என்னை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்துகிறது.

நீங்கள் ஒதுங்கியிருப்பதால் தானே இப்படி எல்லோரும் உங்கள் பெயரை பயன்படுத்துகிறார்கள்? நீங்களே எழுதினால் இந்த நிலை ஏற்படாது அல்லவா ? எனவே தான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

நீங்கள் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம். வலைப்பதிவுலகம் தற்போதிருக்கும் அவல நிலையில் உங்கள் பதிவுகள் தான் பதிவுலகை மீட்க இயலும். இனியும் தூங்கிக்கொண்டிருக்காமல் சிங்கமே சீறி எழுந்து வா.

உடனே வாங்க வந்து எழுதுங்க. காத்திருக்கோம்

இப்படிக்கு,
அரசியலற்ற பதிவுலகைக் காண காத்திருக்கும்
உன் அன்பு ரசிகன்.
ஓஸ்லோ, நார்வே.


என்னையும் மதிச்சு இப்டி ஒரு கடுதாசி வந்துருச்சு, இனியும் நான் தூங்கிக்கிட்டேயிருந்தா அது என் ரசிகனுக்கு நான் செய்யிற துரோகம் என்பது என் மரமண்டையில் உறைத்துவிட்டதால் உடனே புறப்படுகிறேன். இனி என் பதிவுகள் பதிவுலகை கலங்கடிக்கும் என என் இரசிகர்களுக்கு அறிவித்துக்கொள்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் அனைத்துக்கும் பின்னூட்டமிடுபவர்களே பொறுப்பு.
பெயர் உள்ளவங்க, இல்லாதவங்க, அணாணி,தம்பாணி எல்லாரும் பின்னூட்டமிடலாம். பின்னூட்டங்கள் யாரையும் தாக்காமலிருக்கட்டும்.

நான் பிரபலப் பதிவர் என்பதால் எனக்கு பலவேலைகள் இருக்கும், பின்னூட்டங்களில் வரும் தேவையற்ற கருத்துக்களை உடனே நீக்க எல்லாம் என்னால முடியாது. முடிஞ்சப்ப எல்லாத்தையும் படிச்சுட்டு நீக்கிருவேன்.

கமெண்ட் மாடரேசன் எல்லாம் வைச்சுக்கிட்டு ஒன்னு ஒன்னா ரிலீஸ் செஞ்சுகிட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல. அதுனால கமெண்ட் ஓபன் டு ஆல்.

பொறுப்பா அடிச்சு ஆடுங்க மக்கா.

5 comments:

ஓஸ்லோ ரசிகர் மன்றம் said...

வணக்கம் அய்யா,
எங்க வேண்டுகோளுக்கு இணங்க நீங்க எழுத வந்ததுக்கு ரொம்ப நன்றி. தொடர்ந்து உங்க எழுத்துக்கள வாசிக்க ரொம்ப ஆர்வமா இருக்கோம்.

Sanjai Gandhi said...

இவ்ளோ லேட்டா பதிவெழுதறிங்களே.. அவ்ளோ சோம்பேறியா நீங்க? கிகிகி..

ஜோசப் பால்ராஜ் said...

நீங்க தானே உண்மையானப் பிரபலப் பதிவரு? அப்புறம் ஏன் ரொம்ப பேரு உங்க பேரச் சொல்லிக்கிட்டு திரியுறாங்க?

ஊர்சுற்றி said...

:)

Radhakrishnan said...

ஆஹா ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் உடன் துணைக்கு வரும் நகைச்சுவைப் பாத்திரம் போல் அல்லவா மின்னுகிறது. சிரிப்பை வரவழைத்தப் பதிவு. தொடரட்டும்.

Post a Comment